Wednesday, December 23, 2009

காதலின் மையத்தில் நீ !!!! நட்பின் விளிம்பில் நான் !!!

காதலின் மையத்தில் நீ !!!! நட்பின் விளிம்பில் நான் !!!




நான் நடக்க உன் கைகளை நீட்டினாய் நீ

- காதலை கண்களில் தேக்கி

உற்சாகத்தோடு உன் விரல் பிடித்து நடந்தேன் நான்

- நட்பின் புன்னகை ஏந்தி

என் கண்களில் கண்ணீர் கண்டு துடைக்க விழைந்தாய் நீ

- காதலின் பரிதவிப்போடு

ஆதரவாய் உன் தோள் சாய்ந்து விசும்பினேன் நான்

-நட்பின் ஆறுதலோடு

வலியின் சாயலாம் சோகத்தை நெஞ்சில் தேக்கி நீ என்னை பார்க்க

- காதலின் கலவரத்தோடு

உன்னை என் மடியில் சாய்த்து தலை கோதினேன் நான்

- நட்பின் அரவணைப்போடு

நட்பின் விளிம்பை தாண்டிய நான் உன்னை தேடுகிறேன் என்றேன் !!!! நீயோ என் இமைகளை மூடச்செய்து நீல கடலின் ஆழத்தில் என்னை நிறுத்தி உன் நினைவு மழையினால் என்னை நினையச்செய்தாய் !!!

உன் கண்ணீர் முத்துக்களினால் முத்தாரம் சூட்டினாய் !!!!


நீ எங்கே என தேடி அலைந்து என் முன்னே வா என்றேன்

- காதலின் வலியோடு

காற்றிலே கலந்த நான் உன் சுவாசமாக இருக்கிறேன் என்றாய்

- காதலின் வெற்றி புன்சிரிப்போடு


நெருங்கும் போது விலகும் காதல்.... விலகும் போது நெருங்குவதேன் !!!


விழியில் நீரை நிறைத்து நான் தேடும் போது ..........


உன்னை மறைப்பதும் ஏன் ?????

Tuesday, December 22, 2009

நான் வருத்தமா இருக்கேன்



என்ன கோளாறுனு தெரியலை இந்நேரம் வரை  என் ப்ளாக் சரியாய் வேலை செய்யலை .... அதுதான் இந்த ஆய்வுப்பதிவு .... என்னோட நேற்றைய பதிவு தானா   டெலிட் ஆகிடுச்சு !!!! ரொம்ப வருத்தமா இருக்கு !!! இப்போ தானா எல்லாம் சரி ஆச்சு !!!! ஆனாலும் என்னோட ஒரு படைப்பு போனது ரொம்ப வருத்தமா இருக்கு :((((((((((((((((((((((((((((........

Monday, December 21, 2009

இது ஒரு கவிதையான விடுகதையின் கதை - விடை இங்கே !!!


ஒரு ஊரில் ஒரு புலவன் இருந்தானாம் அவன் தமிழ் பற்றுள்ளவன்... பற்றுதலின் காரணமாக தமிழில் மேன் மேலும் தேர்ச்சி பெற்றான் .... தேர்ச்சியின் விளைவாக தமிழ் அறிவில் நிகரற்ற நிலை பெற்றான் .... அந்த நிலையினால் புகழ் சேர்த்தது, புகழோடு சேர்ந்து செருக்கும் சேர்ந்தது, செருக்கின் விளைவாக ஆணவம் குடிகொண்டது அவனிடம் .... மற்றவரை மதியாமல் மிதித்தான் ...... இவன் இவாறு இருக்க ... இவனுடன் யாரும் பேசுவதில்லை இவன் ஆனவக்குனதால் கற்ற தமிழின் பெருமை மங்கியது ... அவன் இவாறு இருக்க .....................

ஒரு நாள் அவனுக்கு ஏற்பட்ட ஒரு உபாதையால் ஒரு மருத்துவரை நாடி சென்றான் !!!! மருத்துவர் ரொம்ப அமைதியானவர் !!! சாந்த சொரூபி !!! நிறைகுடம் !!!!! தனக்கு எல்லாம் தெரிந்தாலும் கொஞ்சம் அடக்கியே வாசிப்பவர் !!!! நம்ம புலவர் அங்கே வந்த சமயம் ஒரு சிலர் மிக அன்புடன் மருத்துவரிடம் வார்த்தையாடி கொண்டு இருந்தனர் .... புலவருக்கு பொறுக்கவில்லை... மருத்துவரின் உதவியாளரை செற்றே கடிந்து பணித்தார் ..... உதவியாளரோ உள்ளே சென்று, வெளியே வந்து மருத்துவரின் மொழியாடல் நொடிகளில் முடிந்துவிடுமாம் !!!!!!!!!! நீங்கள் சற்று பொறுமை காக வேண்டும் என்று பணிவுடன் கூறினான்... பொறுப்பாரா நம் புலவர் உடனே புயலென உள்ளே புகுந்தார் ....


இருக்கையில் அமர்ந்தார் !!!! மருத்துவர் அப்போதும் அமைதி காத்து !!! என்ன அவசரமோ ஐயா நீர் இப்படி புயலென துடித்து வர காரணம் தான் என்ன ???? என்று அமைதியே உருவாக வினவினார் !!!!

நம்ம புலவர் சும்மா இருப்பாரா !!! மருத்துவர் ஐயா அவசரம் தான் உயிர் போகும் அவஸ்தையும் கூட .
கேளுங்கள் .............

முக்காலை கையில் ஏந்தி
மூவிரண்டு வழி நடக்கையிலே
அக்காலின் கீழ் காலில்
அஞ்சுதலை நாகம் கொதிற்று

என்று புதிர் போட்டார் !!!!!

மருத்துவர் சிறிது சிந்தனைக்கு பின் சுற்றி உள்ளோரை ஒருமுறை பார்த்து சிரித்தார் ..... அவர்களோ ஒரு பெரிய கேள்வி குறியை முகத்தில் தேக்கி மருத்துவரை ஆவலோடு நோக்கினர் !!!!! சிறிது நகைப்புக்கு பின் மருத்துவர் புலவரை நோக்கி முறுவல் மாறாமல் !!!

ஆம் ஐயா தாங்க முடியா உயிர் கொல்லும் வலிதான் !!! கேளுங்கள் மருந்தை

பத்துரதன் புத்திரனின்
மித்துருவின் சத்துருவின்
பத்தினியின் காலை வாங்கி தேய்

என்றுரைத்து பெரிதாக நகைத்தார் !!!! புலவரின் முகத்திலோ ஈ ஆடவில்லை !!! மருத்துவரை வணங்கி பணிவாக அவ்விடத்தை விட்டு அகன்றார் !!!! அவர் செருக்கும் ஆணவமும் அவரை விட்டு அச்ச்சனமே அகன்றது !!!!

இப்போ நீங்க எனக்கு இவ்விரு பாடல்களின் அர்த்தத்தை சொல்ல வேண்டும் !!!!

இது எனக்கு என் தத்தா சொன்ன கதை !!!! உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன் !!!!!!!!!!!!!


இந்த கதையை நான் தான் பின்னினேன் !!!! ஹி ஹி ஹி
இப்போ விடை

முக்காலை கையில் ஏந்தி
மூவிரண்டு வழி நடக்கையிலே
அக்காலின் கீழ் காலில்
அஞ்சுதலை நாகம் கொதிற்று


இரண்டு கால்கள் மற்றும் கைதடி சேர்ந்து மூன்று கால்கள்
மூவிரண்டு ( 6 வழி பாதை ) நடந்து போகும் போது
அக்காலின் கீழ் காலில் - அடி பாதத்தில்
அஞ்சுதலை நாகம் கொதிற்று - 5 தலை கொண்ட நெறிஞ்சி முள் குத்தியது

பத்துரதன் புத்திரனின்
மித்துருவின் சத்துருவின்
பத்தினியின் காலை வாங்கி தேய்

பத்துரதன் - தசரதன்
புத்திரனின் - தசரதனின் புத்திரன் ராமன்
மித்துருவின் - ராமனின் மித்துரு சுக்ரீவன்
சத்துருவின் - சுக்ரீவனின் சத்துரு வாலி
பத்தினியின் - வாலியின் பத்தினி தாரை -
காலை வாங்கி தேய் - தாரையின் காலை வாங்கினால் தரை ---
தரையில் தேய்க்க வேண்டும் என்பது பொருள்
ப்ளீஸ் யாரும் அடிக்க வராதீங்க !!!!!!!!

Wednesday, December 16, 2009

டிஆரின் கவிதைகள்








டிஆரின் கவிதைகள்

பல கேலிகளும் கிண்டல்களும் இருந்தாலும் நாம் ஒப்பு கொள்ள வேண்டிய விஷயம் டிஆரின் இசையும் பாடல் வரிகளும்........அவர் எழுதி இசை அமைத்த சில பாடல் வரிகள் மிக அற்புதமானவை...........என் மனம் கவர்ந்த பாடல் வரிகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன் தங்களின் மேன்மையான கருத்துகளையும் எதிர்நோக்குகிறேன்

படம் : மைதிலி என்னை காதலி
பாடல் : ஒரு பொன் மானை

தடாகத்தில் மீனொன்று காமத்தில் தடுமாறி
தாமரை பூ மீது விழுந்தனவோ
இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ


இதை விட பெண்ணின் கண்களுக்கு ஒரு அழகான உவமை சொல்லமுடியுமானு தெரியலை

சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேர அதுதானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்


அழகுக்கு அழகு சேர்க்கும் வார்த்தைகள்...........

வீணை எரிகிறது விரல்கள் வேகிறது
நாதம் மீட்டுகிறேன் வாராயோ
புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது
படகை செலுத்துகிறேன் வாராயோ
என்னை இழந்த பின்னும் எறிய துடிக்க என்னும்
தீபம் போல மனம் அலைகிறது
என்னை இழந்த பின்னும் உன்னை என்னும்
இதய அரங்கம் இங்கு அழைக்கிறது
வாழ்வது ஒரு முறை உனக்கென வாழ்வதே முழுமை என்பேன்
சாவது ஒரு முறை உனக்கென சாவதே பெருமை என்பேன்


இந்த பாட்டு அதே படத்தில் நாளும் உந்தன் உறவைனு தொடங்கும் சோக பாடல் .... படத்தின் இறுதியில் இந்த பாடல் இடம் பெரும் ... இதுலே நம்ம டிஆர் கத்தி குத்து வாங்கி உடம்பெல்லாம் ரத்தத்தோட ஒரு சின்ன முதல் உதவி கூட இல்லாம சுமார் ஒரு ஐந்து நிமிஷம் பாடுவார் ( இது தனி காமெடி ) நம்ம கதாநாயகி ஒரு கண்ணாடி மாளிகை உள்ள பரத நாட்டியம் ஆடுவாங்க அதை வில்லன் ரசிப்பார்.....இப்போ பாட்டுக்கு வருவோம் ரொம்ப அருமையான வரிகள் உள்ள சோகத்தை அப்படியே காட்டும் விதமான ஒரு பாடல் ........ எஸ் .பி .பாலசுப்ரமணியம் அவர்கள் ரொம்ப அருமையா பாடி இருப்பார்..........


படம் - ரயில் பயணங்களில்
பாடல் - வசந்த காலங்கள்

கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா அம்மம்மா ...
அவள் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மனத்தில் கமழ்வது தமிழ் மனமோ
செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஆடாதோ குயில்கள்
மலையில் நெளியும் மேகக் குழல்கள் தாகம் தீர்த்திடுமோ
பூவில் மோதப் பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ

மீண்டும் பாருங்க என்னமாதிரி வார்த்தைகளை கொண்டு விளையாடி இருக்கார் மனுஷன் அப்பறம் இசை மனசோடு ஒட்டிக்கொள்ளும் ... ஜெயச்சந்திரன் அவர்கள் ரொம்ப அருமையா பாடி இருப்பார்

இது அதே படத்தில் வசந்தம் பாடின்னு துடங்கும் பாடல் !!!!இதை பாடியவர் S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் எவ்வளோ அழகாக வார்த்தைகள் பாருங்க.


ஒரு முறையே பார்க்க
அதில் உள்ளம் தன்னை இழக்க
விழி மடல் கொண்டு மறைக்க
என் மனம் கொஞ்சம் கலங்க

தேவதை போல் மயக்கும்
என் ராகம் அவள் அழைப்பு
பூங் காவேரி போல் நெளியும்
என் கீதம் அவள் சிரிப்பு


இன்னும் நிறைய இருக்குங்க எழுத நேரம் இல்லை, ஆபீஸ்ல எவ்ளோதான் எழுத முடியும் சொல்லுங்க.... பாக்குறவங்க தப்ப நினைபாங்க இல்லை எதோ நாஞ்சில் பிரதாப் ப்ளாக் பார்த்து ஒரு வேகத்துலே எழுத துவங்கிட்டேன்.... ஏன்னா நான் மிகவும் ரசித்து கேட்கும் பாடல்கள் இவை..... அதனால இப்ப ஒரு கமா போடறேன்... சமயம் வரும் போது மீண்டும் எழுதுவேன் .........

















என்னவனும் நானும் என் மழையும்




இதை நான் கவிதைன்னு சொல்ல மாட்டேன் .....
எப்பவுமே என்னை மழையோடு சேரவிடாமல் பிரித்து, ஏன் என்ற என் கேள்விக்கு பதிலாய் அக்கறைன்னு கோடிட்டு காட்டி சிரித்த என்னவனை நானும் என் மழையும் சேர்ந்து தோற்கடித்தால் எப்படி இருக்கும்னு நினைச்சு பார்த்தேன்... அப்படியே எழுத்தாகிட்டேன்.............



முதல் துளி மண்ணை தொட
இரண்டாம் துளியை பிடிக்க நான் கையேந்தி வரைந்தேன்
அத்துளியோ என்னை பார்த்து கண் சிமிட்டி
என் கணங்களில் கலக்க
தொடர்ந்து விரைந்த பல துளிகள்
என்னோடு உறவாட
நானும் எனை மறந்து காற்று குதிரை ஏறி
என் கார்குழல் பரக்க மழையோடு மோதினேன்
தோற்ற நான் துவண்டு அழ
தேற்ற என்னோடு சேர்ந்து அழுதது என் மழை
எங்கள் இருவரையும் பிரிக்க அங்கே வந்த
என்னவனின் குடையை ஒரே பாய்ச்சலில் தட்டிவிட்டது
என் காற்று குதிரை ........ என்னவனின் வாடிய முகத்தை
பார்த்து என்னோடு சேர்ந்து சிரித்தது என் மழை ..............

Tuesday, December 15, 2009

எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு



மீண்டும் ஒரு திரைப்பாடல் அர்த்தமுள்ள ஆழமான பாடல் !!! அருமையான வரிகள் " சமரசம் உலாவும் இடமே " இந்த பூமியில் வாழும் போது எத்தனை செருக்குடன் இருந்தாலும் நாம் அனைவரும் சமம் என்பதை எடுத்துறைகிறது இந்த பாட்டு........... இந்த பாட்டை நான் எதனை முறை கேட்டிருப்பேன் என்று எண்ணுவது கடினம் தான் ..... நான் மிகவும் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று ..... உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்

திரைப்படம் : ரம்பையின் காதல்
திரை இசை : T.R. பாபா அவர்கள்
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்
பாடல் ஆசிரியர் : மருதகாசி அவர்கள்

பாடல்

சமரசம்ம்ம்.....
உலாவும் இடமே ....
நம் வாழ்வில் காண .....
சமரசம் உலாவும் இடமே

ஜாதியில் மேலோறேன்றும்
தாழ்ந்தவர் தீயோறேன்றும்
பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லை இன்றியே வாழ்ந்திடும் வீடு
உண்மையிலே இது தான்
நம் வாழ்வில் காண .....
சமரசம் உலாவும் இடமே

ஆண்டி எங்கே
அரசனும் எங்கே
அறிஞன் எங்கே
அசடனும் எங்கே
ஆவி போனபின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான்
நம் வாழ்வில் காண
சமரசம் உலாவும் இடமே

சேவை செய் தியாகி
சிங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை
நாடிடும் யோகி
எல்லோரும் ஒன்றாய் இங்கே உறங்குவதாலே
உண்மையிலே இது தான்
நம் வாழ்வில் காண
சமரசம் உலாவும் இடமே

http://www.hummaa.com/music/album/Rambaiyin%20Kaathal/14081
இங்கே சொடுக்கி பாட்டை கேட்கலாம்

Monday, December 14, 2009

நீ எனக்காக !!!


நான்
என் இமை மூடி உன் தோள் மீது தலைசாயும் போது

எதோ ஒரு சங்கீதம் கேட்கிறது உன் சின்ன சிரிப்பில்
காதலின் சுவடுகள் இதுதானோ
நீ இருக்கும் பிரதி நிமிடமும் என் வானில் பூ மழை
உன்னோடு வாழ்ந்தால் கஷ்டங்களும் இஷ்டங்களே
உன்னோடு வாழ்ந்தால் வார்த்தைகள் கூட கவிதையாகி போகும்
உன்னோடு வாழ்ந்தால் நிஜமாகும் சுவர்க்கம்
நீ என் சுவாசத்தின் ஆதாரம்
நீ என் புன்னகையின் வண்ணம்
நீ என் எண்ணகளின் மின்னல்
நீ என் கண்களின் ஒளி
நீ என் இதயத்தின் துடிப்பு
என் வாழ்நாள் முழுதும் பார்க்கவேண்டும் உன் புன்னகை
இந்த சந்தோசம் நிலைக்க வேண்டும் என் நினைவுகளில்

மீண்டும் ஒரு அர்த்தமுள்ள பாடல்




இதை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன் . காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை.
இப்புவியில் எபோதும் இரண்டே பிரிவுகள் பணம் உள்ளவன் , பணம் இல்லாதவன் .... இந்த பாட்டு அந்த பாகுபாட்டை தெளிவாக கூறிகிறது .
வாழ்க்கை பந்தயத்தில் எபோதும் பணம் படைத்தவன் கையே ஓங்கி நிற்பதை நாம் கண்கூடாக காணமுடியும்.....

பாடல் இடம் பெற்ற படம் : பணம் பந்தியிலே
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்
இசை : கே.வி. மகாதேவன் அவர்கள்
எழுதியவர் : க.மு. ஷேரிப்ப் அவர்கள்

பாடல்
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
இதை பார்த்து அறிந்து நடக்காதவன்
மனிதன் இல்லே பிழைக்கும் மனித இல்லே

ஒன்னும் தெரியா ஆளானாலும் பணம் இருந்தாலே
அவனை உயர்த்தி பேச மனித கூடம் நாளும் தப்பாதே
என்ன அறிவு இருந்தாலும் பணம் இல்லாத ஆளை
உலகம் எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே

ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காக தான்
பணம் பறந்து விட்டால் புகழ்ந்த கூடம் இகழும் உன்னை தான்

ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை
இதை இனி பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை

உன்னால் உயர்த்த நிலை அடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு
அவர்கள் உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
மண்ணாய் நீயும் மதித்து அவரை துணிவுமே கொண்டு
நாளை முயன்று நீயும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு

இப்போ சொல்லுங்க இந்த பாட்டு ரொம்ப எளிமையாவும் அதே சமயம் ஆழமாவும் இருக்கு இல்லையா..
உங்க கருத்துகளை எதிர் நோக்குகிறேன்
http://www.hummaa.com/music/album/13932/Panam+Panthiyile இங்கே சொடுக்கி இப்பாட்டை கேளுங்கள்

Thursday, December 10, 2009

பா படத்தை தமிழில் ரீமேக் பண்றாங்க

ஹிந்தியில் வெளிவந்த பா படத்தை தமிழில் ரீமேக பன்றாங்கோ !!!!

படம் பேரு நைனா !!!!!!!!!








Wednesday, December 9, 2009

பாடல் - உதவி வேண்டும் - ப்ளீஸ்




நேற்று எனது கணினியை குடைந்து கொண்டு இருந்தேன் ... தற்செயலாக இந்த பாட்டை கேட்க நேர்ந்தது .... சொன்னால் நம்ப மறுப்பீர்கள் .... இந்த பாட்டை ஒரு முப்பது முறை கேட்டு இருப்பேன் ...

யாரவது இந்த பாடல் இடம் பெற்ற படம் மற்றும் எழுதியவரை பற்றி சொல்லுங்களேன்...... இணையத்தை அலசிட்டேன் என் மண்டைக்குள்ள நண்டு பிராண்டுது .......ப்ளீஸ் .............. பாருங்க பாருங்க மண்டை மேலே எவ்ளோ பெரிய நண்டுடுடுடுடு ......................................



பாடல்

மண் மீது மானம் ஒன்றே பிரதானம் என்றென்னும் நிலை வேண்டும்
இதை மறந்தாலே வாழ்வில் கிடைக்கும் சன்மானம் மாறாத அவமானம்

கண்ணான கணவன் தன்மானம் தன்னை காப்பாற்றும் பெண் தெய்வம்
மனம் புண்ணாகி சிந்தும் கண்ணீரை காண பொருக்கதடா தெய்வம்

அழியாத செல்வம் புவியோர்கள் ஏன் பணம் காசிலே இல்லை
மெய் அன்பே எந்நாளும் அழியாத செல்வம் அதை நீயும் மறவாதே

எண்ணாத துன்பம் எது வந்த போதும் எதிர்கொள்ள தயங்காதே
இந்த எளியோருக்காக நீ செய்த தாகம் அதை லோகம் மறவாதே ....
நீங்களே சொல்லுங்க இந்த பாட்டை முப்பது வாடி கேட்டதில் தப்பு இல்லை தானே... எத்தனை உண்மையான வரிகள்...........

Tuesday, December 8, 2009

புல்


என்னவனே !!

நேற்று நீ நின்றிந்த கால்தடத்தில் இடது புல் ஒன்றை எடுத்து
என் வீட்டில் பதியமிட்டேன்;

இன்று அதன் வேரருகே ஒரு குட்டி புல்

கண் சிமிட்டும் நேரத்தில் என் வீடு முழுவதும் புற்கள்

பச்சை பசேலென என் மனத்தோட்டம் முழுக்க

உன் நினைவு பூக்கள் மலர்கிறது;
என் சுவாசத்தில் பூ வாசம் நிறைகிறது .........................

தோழமையே !!!!!!!!!!!!!!!!!!!!

இது என் தோழனின் படைப்பு !!! உங்களோடு பகிர்கிறேன்

காலம் மறக்கச்செய்ய மறந்துவிட்ட
பல நினைவுகளின் எச்சங்கள்
மனதின் மூலையில் மலைக்குன்றாய்

பாதையில் வரும்
பனிக்காற்றும் பூஞ்சோலைகளும்
முட்செடிகளும் புதர்காடுகளும்
தோண்டிப் பார்க்கவே செய்கின்றன
புதைந்திருக்கும் நினைவுகளை

எனக்கான ஒவ்வொரு
விடியல்களிலும் பொழுதுகளிலும்
காலதேவன் முன் மண்டியிட்டு மன்றாடுகிறேன்
அத்தனை நினைவுகளையும் அள்ளிச்செல் என

ஆனாலும் நினைவெச்சங்கள் எச்சங்களாகவே
நிகழ்வின் கணங்களை அச்சுறுத்திக் கொண்டே….

சாம்பு........

Thursday, November 12, 2009

நம்மை போல் ஒருவன்


இது எனக்கு மெயில்ல வந்த ஜோக்

_____________________________________________________________

நம்மை போல் ஒருவன்

CM-->COMMON மண்

Phone ringing in commisioner office....

"Hello."

CM: "Mr. I.G.R Marrar... நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேளுங்க. I am sure you are aware of the power of the state of the terror cinema, “விஜய் படம் (Movie) சொல்லுவாங்க”. அவரு நடிச்ச வேட்டைக்காரன் terror cinema உங்க சிட்டில 5 எடத்துல ரிலீஸ் ஆகபோகுது. There will be many explosions in your city. bye..."

Marrar: "Hello... Hello..." (the line went dead...)

Asst: "ரொம்ப short call sir. trace பண்ண முடியல .

" Marrar: "அடுத்த கால் வரும்போது அதா trace செய்தே ஆகணும் . No more excuses." Phone ringing...

Marrar: "5 குத்து பட்டு , 4 பைட் , கொஞ்சம் செண்டிமெண்ட் சீன் . எந்த குப்பனும் சுப்பனும் இப்படி ஒரு படம் எடுக்க முடியும் .

" CM: "Mr.IGR.Marrar commanding ஏரியால இருகர தியேட்டர்ல பழைய விஜய் மூவி “வில்லு”, ஓடிகிட்டு இருக்கு . இன்னும் 20 mins ஷோ முடிய போகுது . முடிஞ்சா போய் படம் பாக்கறவங்கள காப்பதிகங்க .

" Marrar: "hello... hello..." the line went dead...

Marrar: "Emergenecy. எந்த தியேட்டர்ல விஜய் படம் ஓடிகிட்டு இருக்கோ அங்க செக்யூரிட்டி அதிகம் பண்ணுங்க .

" "yes, sir."

Phone ringing in reporter's desk...

CM:"Hello Ms.Natasha Rajkumar. This is going to be an important day in your life.

" Natasha: "டேய் , குரல் மாதி பேசின அடையாளம் தெரியாதுநு நெனசுடியா ?

" CM: "நான் உங்க ஆள் இல்ல . நான் சொல்றத கவனமா கேளுங்க . go to satyam theater with you VC இன்னும் 20 minutes la. This is live and this is live.

" Natasha: "hello... hello...." (line went dead.)

cops rushed to Satyam theater.. The people inside the theater watching the show were struggling to breathe and live.cop takes his walkie-talkie: "Sir, the situation is worse. we don't know how to bring them back alive." Marrar phone ringing..."hello...

" CM: "எந்த ஒரு குப்பனாலையும் சுப்பனாலையும் இப்படி ஒரு சினிமா எடுக்க முடியுமா Mr.Marrar? இப்போவாவது சீரியஸ்சா இருக்கீங்களா ?

" cop:"Sir, இன்னும் 3 minutesla மூவி முடிய போகுது . முடிஞ்சா அத்தன பேரும் செதுடுவங்கநு நெனைகிறேன் .

" CM: "எப்படி காபதனும்நு சொல்லவா ?

" Marar: "Please, tell us." CM: "Goto operator room and cut the wire to projector.

" Marar: "மெதுவா சொல்லுங்க .

" CM:"மெதுவா? Operator... room... கு போய் ... projector... wire ..... cut பன்னுங்க ...

" Marar: "goto operator room and cut the wire to projector.

" Cop: "yes sir." Line went dead...

3 PM:phone ringing...

CM: "Hello Mr. Marrar. நீங்க பாத்தது சாம்பிள் தான். ஹிஸ் ஓல்ட் மூவி . இப்போ வரபோற வேட்டைக்காரன் அத விட பயங்கரமானது . “ATM, Kuruvi, Villu” விட பயங்கரமானது Listen to me. DOn't waste time. You don't have it. நான் சொல்றத செய்ங்க .

" Marrar: "என்ன செய்ய சொல்றே ?

" CM: "Sivakasi, villu, kuruvi, ATM”, இந்த மூவி யோட எல்லா பிரிண்டையும் எடுத்துக்கிட்டு “சோழாவரம் ஏர்போர்ட்க்கு வாங்க. Send just 2 cops with that.That cop should have phone with conferencing facility. I need a huge landing space. Police விதவைகளோட எண்ணிக்கைய அதிக படுதமாடீங்கனு நம்பறேன். I want all the copies exactly by 5 PM. " The call ended.

Marrar: "Collect all the movies and put it in a safe truck and take itto Sozavaram airport as he said.

" Cop: "Sir, they are very dangerous.

" Marrar: "I know. But இந்த மூவிஸ் எல்லாம் இப்போ விட்டுட்டு அப்பறம் எடுத்தக்கலாம் ...Tamil or Telugu. begin the operation now."

"Yes sir."

4 PM:Natasha mobile ringing:CM:"Hello Ms. Natasha. Somehting is waiting for you in sozavaram airport. Be there at 5 PM"The line went dead.

5 PM: Phone ringing...CM: "Mr.Marrar, அந்த டாங்கரை அங்கே இருகர மார்க்ல விட்டுட்டு நூறு அடி தள்ளி போக சொல்லுங்க உங்க காப்சை.. Conference call ஆன் பண்ணுங்க .

"Marrar: "Do as he instruct.

" Cop1: "I'll take வில்லு movie box with me. I need it. We can give other movies.

Cop2: "You are disobeying. Put it there.

" Cop1: "No...

" Cop: "Something unusual has happened. He didn't get the movies to save.He destroyed all the three movies

" Marrar: "You mean all the four?

" Cop1: "No. I withheld வில்லு movie Box with me.

" CM: "தப்பு பண்ணிடீங்க Mr.Harrif. அதையும் நீங்க அங்க வச்சிருக்கணும். " எரிஞ்சு போய் இருக்கும் .

" Marrar:"நீ என்ன தல ரசிகனா , விஜய் படம் எல்லாம் அழிகிரியா?

" CM: "விஜய் படம் பிடிக்கலைனா தல ரசிகன்தான் இருக்கணுமா?
விக்ரம் ரசிகனா இர்ருக்க கூடாத என்ன ??? சூர்யா ரசிகன் ? கமல் ரசிகன் ? இவங்களுக்கெல்லாம் இவன் (விஜய்) படத்த பார்த்த கோவமே வரதா ? I am just a stupid common man Mr.Marrar. Harrif,
இருகர அந்த ஒரு படத்த அழிச்சுடுங்க .அத வெளியே விட்டா அதை பாத்து நிறைய பேர் படம் எடுக்க ஆரமிச்சுடுவாங்க ...

நான் ஒரு தமிழ் சினிமா ரசிகன் சொல்றேன் , please destroy it. Its in your hand now.

" Marrar: "நீ இப்படி வெறித்தனமா நடந்துக்க கரணம் என்ன ? உன் குடும்பத்துல யாராவது விஜய் படம் பாது செத்துபோய்டான்கலா ?

" CM: "நீங்க கேடீங்க அதனால சொல்றேன். 14 year old. We are adults Mr. Marrar. நீங்க police . நெறைய இந்தமாரி பாத்திருபீங்க.அந்த 14 year old எருமை “குருவி poster” சாப்பிட்டு அங்கேயே செத்து போச்சு. இதை பாத்து கண்ணீர் விட , அது என் வீட்டு எருமையா இருக்கணும்னு அவசியமில்ல. பக்கத்து வீட்டு எருமைய இருந்தா அழுக வராதா Mr.Marrar?

harrif, please அந்த படத்தோட எல்லா காபியும் கொடுத்துடுங்க. அந்த மாரி படங்கள் தமிழ்ல வந்த தடயமே இருக்க கூடாது . Please...

" Harrif Burned all the copies.

CM: "நீங்க பயப்படற மாரி வேட்டைக்காரன் மூவியை நான் release பண்ணல இந்த தீவாளிக்கு.

" Marrar: "I hope so."

Wednesday, November 11, 2009

நானும் நீயும்


சேர்ந்து சிரித்தோம் நட்பில்
ஏனோ பிரிந்து அழுகிறோம் காதலில்

சேர்ந்தே இருபினும் நம் உயிர் தனியே நின்றது அன்று
பிரிந்து நின்றாலும் நம் உயிர் உறவாடுகிறது இன்று
குடைக்குள் விழும் சாரலை போல
உன் நினைவுகள் என் நெஞ்சோடு உறவாடுகிறது

நீ இல்லை என்ற ஒற்றை சொல்லில் சரிந்த என் இதயம்
உன் ஞாபகம் என்ற ஒற்றை சொல்லில் உயிர் தங்குகிறது

நிலதோடு உறவாடும் ஒவ்வொரு மழையிலும்
எங்கோ பிரிந்த காதலின் கண்ணீர் கலந்தே இருக்கிறது

என் கண்கள் எழுதும் காதல் கவிதைகள்
என் கண்ணீரிலே கரைத்து மழையோடு சொல்லாமல் கலக்கிறது

பூமியில் பூக்கும் எல்லா காதலிலும் ஒரு பைத்தியகாரத்தனம் உள்ளது
என் காதலும் விதிவிலக்கல்ல

நீ இருந்தால்தான் தான் நான் காதலிக்க வேண்டும் என்றில்லை நீயே என் சுவசமானபின்.........

Tuesday, November 10, 2009

அமரர் கல்கியின் " அலை ஓசை "

என் தோழிக்காக அமரர் கல்கி அவர்கள் படைத்த காவியம் " அலை ஓசை "
கல்கி - அலை ஒசை: பாகம் 1 - பூகம்பம்
http://www.tamilnation.org/literature/kalki/unicode/mp205.htm
கல்கி - அலை ஒசை: பாகம் 2 - புயல்
http://www.tamilnation.org/literature/kalki/unicode/mp206.htm
கல்கி - அலை ஒசை: பாகம் 3 - 'எரிமலை'
http://www.tamilnation.org/literature/kalki/unicode/mp208.htm
கல்கி - அலை ஒசை: பாகம் 4 - பிரளயம்
http://www.tamilnation.org/literature/kalki/unicode/mp210v4p1.htm







Monday, November 9, 2009

காதல் உணர்வு


நெஞ்சு நெருங்கிய போதெல்லாம்
நல்ல நட்பு பூப்பதைப்போல
வாழ்வில் நூறுபேரிடம்கூட
ஒருவருக்குக் காதல் வரலாம்

ஆனால்
காதல் இதயம் என்பது ஒற்றைக் காம்பு
அதில் ஒரு பூதான் பூக்கும்
அந்த ஒரு பூ காய்ந்து உதிர்ந்தால்தான்
இன்னொரு பூ பூக்கும்

காதலிக்கும் நூறுபேரும்
கைக்குள்ளேயே சிக்கிக்கொண்ட விரல்களைப்போல
நம்முடனேயே இருப்பார்கள் என்றில்லை

வண்ண வண்ண எழிற் கோலங்களில்
நம் உயிர் கரைந்து போனதை
அந்த வண்ணத்துப் பூச்சியிடமே
நாம் சொல்லாததைப்போல
அந்த நூறுபேரிடமும் நம் காதலைச்
சொல்லிவிட்டோம் என்றுமில்லை

வீசிச் செல்லும் வசந்தக் காற்று
சுகத்தையெல்லாம்
நம்மிடம் நிறைவாய்க் கொட்டிவிட்டு
நாம் யாரென்றும் அறியாததாய்
விலகிப்போவதைப்போல
அந்த நூறுபேரும்
நம்மைக் காதலித்தார்கள் என்றுமில்லை

ஆனால்
ஏதோ ஒரு நொடியில் எங்கோ ஒரு நினைவில்
அந்த நூறுபேரும்
நம் உயிரை உரசி ஊதுவத்தியாக்கி
வாசனைப் புகையாய்
நினைவும் நினைவுமல்லாததுமான
வினோதக் காற்றில்
கரையவைத்துச் சென்றிருப்பார்கள்

ஆமாம்
காதல் ஓர் அற்புத உணர்வு
அது இதயத்தின் முழுமொத்தத்துடன்
மல்லுக்குநின்ற உயிரின் பேரவஸ்தை

ஆயினும் ஓர் உண்மையை நாம்
ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்
அந்த நூறு பூக்களில் ஏதோ ஒரு பூமட்டும்
உயிரில் நங்கூரம் செழுத்தி
நகராமல் கிடப்பதைத் தவிர்க்க
எவராலும் இயலுவதில்லை

அந்த ஒரே ஒரு பூமட்டும்
உயிருரசிய தொண்ணூற்றொன்பது பூவிலும்
தன் வாசனையின் ஓரத்தை
அப்பி வைத்திருப்பதை
உணராமல் இருக்க முடிவதில்லை

அந்த ஒரே ஒரு பூமட்டும்
உயிரை இரண்டாய்ப்பிளந்து ஒன்றை மட்டும்
நிரந்தரமாய்க் களவாடிக்கொண்டு
மற்றொன்றை ஜென்மத்திற்கும் தவிக்கவிடாமல்
இருப்பதில்லை

எப்படியோ...
வாழ்வில் நூறுபேரிடம்கூட
ஒருவருக்குக் காதல் வரலாம்தான்
ஏனெனில்
நட்பைத் தவிக்கலாம்
காதலைத் தவிர்க்க முடியாது

புன்னகைப்பதைத் தடுத்தாலும்
பூப்பூப்பதைத் தடுப்பதியலுமா

காதல் காமம்தான் என்றால்
சில நூறு டாலர்கள் போதும்
அதைச் சமாளிக்க

காதல் நட்புதான் என்றால்
ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கும் ஆணும்
தேவையே இல்லை

காதல் அன்புதான் என்றால்
ஓராயிரம் குழந்தைகள் உண்டு
அதை அள்ளித்தர

காதல் ஈர்ப்புதான் என்றால்
இயற்கையும் கலைகளும் போதும்

காதல் ஆறுதல்தான் என்றால்
தாய்மடியும் இலக்கியங்களும் போதும்

காதல் காதல்தான் என்றால்
காதலுக்கு இவை யாவுமே வேண்டும்
..........................................................................................
இது என் நண்பனின் படைப்பு
உங்களோடு பகிர்கிறேன்

Thursday, November 5, 2009

நான் !!!! நீ !!!! நம் மழை !!!!!!!


உறக்கம் பிடிக்கா இரவுகளின் விளிம்பில்
வறண்ட பாலைவனத்தில் தனியாய் நான்
இதோ மீண்டும் நம் மழை
முத்து மணிகளாய் என் மேல் விழ
வலியில் முழுவதுமாய் நினைகிறேன்
என் நினைவுகள் உறங்கினாலும்
என் மனதில் வடுக்கள் மறையவில்லை
தொலைந்த நட்பின் காயங்கள் என்னை கொல்ல
நீயோ உன் காதலால் என் ரணமளுத்தி துடிக்க செய்தாய்
துடித்தேன், பின் நிறுத்தி வலியருத்தேன்
நாம் இருவரும் யாரென்று ??????????????

இங்கே நான் ! என்னுள் நீ ! இது நம் மழை

என்னை கடந்து சென்ற கார்மேகத்தில் உன்
-முகம் பார்த்தேன்.........
இடையில் மின்னிய மின்னல் ஒளியுள் உன்
-புன்னகை பார்த்தேன்........
சடசடவென வாரிசொரிந்து என்னை அணைத்த துளிகளில் உன்
- ஸ்பரிசம் உணர்ந்தேன்........
என் இமைகளை மூடினேன் "இங்கே நான் என்னுள் நீ இது நம் மழை"

Wednesday, November 4, 2009

எனக்குள் நீ ( பாகம் இரண்டு )

அதற்குமேல் அந்த அம்மா கூறிய யாவும் அவள் மூளையில் பதிந்தது அனால் அவள் ஸ்மரணை அற்று ஒரு கற்சிலை போல நின்றாள். இமைகள் கூட மூட மறுத்து அசைவற்று நின்றது. அந்த அம்மா இவளின் நிலை கண்டு சற்று பதறி இவளை உலுக்க இவுலகுக்கு வந்தாள். மௌனமே வார்த்தையாக அந்த அம்மாவை கண்ணீர் மல்க ஒருமுறை பார்த்தாள் பின் மெதுவாக திரும்பி நடந்தாள். வாசல் வரை கூட வரவில்லை பின்னால் வந்த குரல் அவளை தடுத்தது அது டேவிட் அவனின் நண்பன் .. இவள் மெல்ல நிமிர்த்து பார்த்தாள். அபோது டேவிட் " என்னமா உன் சைக்கிள் கூட மறந்து போற ? பார்த்து மா நான் உன் வீடு வரை வரட்டுமா " இந்த கேள்விக்கு பதில் சொல்ல கூட தெரியாமல் மௌனமாய் தன் சைக்கிளை தள்ளிய படி வீட்டை விட்டு வெளியே வந்து ஓட்ட கூட தோன்றாமல் உருட்டிய படியே நடந்தாள். சிறிது தூரத்தில் மீண்டும் டேவிடின் குரல் அனால் இந்த முறை இவள் நிற்க வில்லை ஏனோ ஒன்றும் பேசாமல் நடந்தாள் எங்கே போவது என்று கூட தெரியாமல் வர்ஷினியிடம் சென்றாள்.

வர்ஷினி இவருக்கும் பொதுவான தோழி. இவளை பார்த்த வர்ஷி ஓடி வந்து கட்டி பிடித்து கதறினாள். அதற்கு மேல் இவளும் கதறிவிட்டாள். வர்ஷியின் அம்மா இவர்களை தனித்து விட்டு சென்றுவிட்டார்கள்.

வர்ஷி மெல்ல இவளை தேற்ற எத்தனித்தாள் அனால் அவள் முயற்சி பலிக்கவில்லை அந்த சமயம் டேவிடும் அங்கு வந்து சேர்ந்தான். இருவரின் பேச்சிலும் அவள் மாறவில்லை. அபோதுதான் அது நடந்தது அச்சு ( ஆம் அது தான் அவன் பெயர் ) அவளை காதலித்தது அவளுக்கு தெரியவந்தது. டேவிட் பேச்சோடு பேச்சாக அதை சொல்லிவிட்டான்.

இவள் அதிர்ந்து டேவிடை பார்த்தபோது தான் அது அவனுக்கே உறைத்தது. அனால் எல்லாம் முடிந்துவிட்டது. அதற்கு மேல் மறைக்க முடியாமல் டேவிட் இத்துணை நாள் அச்சு தன் மனதிற்குள் பூட்டிய அவனுடைய காதலை நித்திலாவிடம் ( இது தான் அவள் பெயர் ) கொட்டிவிட்டன். விதி வலியது . இதை நம்ப மறுத்த நித்திலாவிடம் அச்சுவின் டயரியை வர்ஷி கொடுத்தாள். நித்திலாவிற்கு ஒன்றுமே புரியவில்லை கோபம் அழுகை எல்லாம் ஒருசேர அசைவற்று நின்றாள். அச்சு இன்று இல்லை என்பதை இவளால் இன்னும் நம்பமுடியவில்லை அதற்கு மேல் அவனின் காதல்.

இத்தனை நாள் எத்தனை பகிர்வுகள் நித்திலாவின் இன்பம் துன்பம் கோவம் என எல்லாவற்றிலும் பாதியாயை நின்ற அச்சு எங்கே இத்துணை உருதுனைகும் பின்னல் நின்றது காதல்தானா.... இவை காதலுக்காக என்றால் என் நட்பு எங்கே.... (தொடரும்........)

எனக்குள் நீ

அவள் மெதுவாக கண் திறந்து பார்த்தாள், மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். உடல் வலித்தது மனம் ரணமாக இருந்தது.. இயலாமை கோவம் இரண்டும் சேர்ந்து அவளை பந்தாடியது. மெல்ல எழுந்து நடந்து வாஷ் பேசின் அருகே வந்தாள். ஒருவித ஒவ்வாமை வயிற்றை புரட்டியது. கண்ணாடியில் முகம் பார்த்தாள் உதடோரம் ரதம் பிசுபிசுத்தது. முகம் கன்றி இருந்தது. கண்கள் சிவந்து ஜீவன் இன்றி கெஞ்சின. அவள் முகத்தை பார்க்க அவளுக்கே பிடிக்கவில்லை. நேற்று நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன மீண்டும் ஒரு வித ஒவ்வாமை வாந்தி எடுத்தாள். நீரை வாரி முகத்தில் அறைந்தாள். மெல்ல நிமிர்ந்து கண்ணாடியை பார்த்து அதிர்ந்தாள் அங்கே அவன் பிம்பம். தலையை ஒரு பக்கமாக சாய்த்து அரிசி பற்கள் தெரிய மிதமான புன்னகை சிந்தி கண்களை சிமிட்டும் அவன் முகம். இவள் கண்களில் மீண்டும் நீர்கோலம். மெல்ல இவள் நினைவுகள் பினோக்கி சுழன்றது. நினைவுகளில் மெல்ல கரைந்தாள். அவன் இவள் தோழன் அனால் இவள் அவன் காதலி உயிரில் கலந்து உணர்வில் சேர்த்து நிதம் கொண்டாடும் காதலி . அவன் தொண்டைகுழி வரை எட்டி பார்த்த காதல் வார்த்தைகளை வாய் வரை கூட வரவிடாமல் தடுத்து விழுங்கி மனதிற்குள் தன் காதலை சாமாதி ஆகிவிடுவான். அவளை பார்ப்பதே போதும் என்ற உணர்வு அவனுக்கு. அவளோ இவன் தோழமையிலே கருப்பை குழந்தை போல பாதுகாப்பை உணர்ந்தாள். அவன் மேல் அளவு கடந்த அன்பு பாசம் அனால் அது காதலா என்றால் இல்லை என்பது தான் இவள் பதில். அவனுடன் பேசாமல் இவளால் இருக்க முடியாது அவனுடன் சண்டை பிடிக்காமல் இருக்க முடியாது. இது தெரிந்ததுனாலோ என்னமோ அவன் காதலை தன் மனதிற்குள்ள பூடிகொண்டான். இவர்களின் இந்த கண்ணாமூச்சி விளையாடும் ஒரு முடிவிற்கு வந்தது. இல்லை முடிவு அவனுக்கு வந்துவிட்டது. ஆமாம் ஆமாம் அவன் போயேவிட்டான் அந்த பேரிடி இவள் தலையில் ஒருநாள் இறங்கியது. ஊருக்கு போய்வந்து ஆர்வத்துடன் அவனை காண ஓடி சென்று பூட்டி கிடந்த அவன் வீட்டை பார்த்து ஏமாந்து பக்கத்து வீட்டில் விசாரித்த பொது தான் இந்த இடி இவள் தலையில் இறங்கியது " இப்போதான் வரியாமா , எங்க கண்ணு போயிருந்த நீ, அந்த அம்மா உன் பேரை சொல்லித்தான் புலம்பினாங்க.” இவளுக்கு ஒன்றும் விளங்காமல் பரபரத்து போனாள். கால்களுகடியில் பூமி நழுவுவது போல இருந்தது. அந்த அம்மா கூறிய வார்த்தைகளை இவள் காதுகள் ஏற்க மறுத்தன “அந்த புள்ள 10 நாலு முன்னாடி ஆக்சிடென்ட்லே செத்துபோய்.....” வாக்கியங்களை அந்த அம்மா முடிக்கும் முன்னே அவள் நிலைகுலைந்து போனாள். ஓங்கி பெருங்குரல் எடுத்து அழக்கூட திராணி இன்றி தவித்தாள் (தொடரும்................)

Monday, October 12, 2009

விடுகதை

வாழ்க்கை விடுகதைகளின் குழுமம் !!!

சிலசமயம் விடையை கையில் வைத்துக்கொண்டு வினாக்களை தேடி ஓடுகிறோம், சற்றே வளைத்தாலும் ஒடிந்து விடும் ஒரு நேர் கோட்டை போல்

பலசமயம் வினாக்களை கையில் வைத்துக்கொண்டு விடைகளை தேடி ஓடுகிறோம் சுற்ற சுற்ற வெளி வர முடியாத வளையத்தை போல்

வினாக்களை தூர எரிந்து, விடைகளை களைந்து, வளைந்து கொடுத்து பின் நிமிர்ந்து நிற்கும் ஒரு நாணலை போலநாம் வாழ பழகினால் என்ன ????

இந்த வினாவிற்கு விடை தேடுகிறேன் .........

இருட்டு நதியில் நதியில் இதமாய் மிதக்கும் குருட்டு படகை போல ........

நான் காத்திருக்கிறேன்

நானும் காத்திருக்கிறேன்.........
ஆமாம் காத்திருக்கிறேன்.........
மண்ணை தொடும் முதல் மழை துளிக்காக..........
மாலை வேளையில் விண்ணில் தோன்றும் நிலவுக்காக
என் கால்களை முத்தமிட ஓடி வரும் கடலைக்காக
கண்களை மூடியவுடன் நிழலாடும் உன் புன்னகைக்காக
என் கண்ணில் துளிரும் முதல் கண்ணீர் துளிக்காக
அந்த முதல் துளியை துடைக்க விரையும் உன் கை விரலுக்காக
உன்னிடமிருந்து அன்பை சுமந்தது வரும் ஒரு குறுஞ்செய்திக்காக
என் காத்திருப்பின் சுகம் தெரியும் எனக்கு !!!!!
என் காத்திருப்பின் சுமை தெரியுமா உனக்கு ?????????