Friday, January 29, 2010

நீ

அனைவருக்கும் வணக்கம் !!!!

நான் வந்துட்டேன் !!!!
ஹ ஹ ஹ !!! " I am Back "
நான் புது மடிக்கணினி வாங்கிட்டேன் !!!

இதை கவிதைனு சொல்லமுடியலை !!!
சும்மா அப்படியே கோர்வையா வந்தது எழுதிட்டேன்
நீங்க படிச்சு பார்த்து நிறை குறைகளை சொல்லுங்களேன்

நீ

" நான் உனக்கு யார் " என்று ஒற்றைவரியில் என்னை கேட்டுவிட்டாய் நீ !!!
என்னை நானே கேட்டுகொள்கிறேன் " நீ யார் எனக்கு "
எனக்கு கிடைத்த பதில்கள் உனக்கு உணர்த்துமா நீ எனக்கு
யாரென்று ?????
















என் உற்றமும் நீ
என் சுற்றமும் நீ
என் அகமும் நீ
என் புறமும் நீ

என் உறக்கமும் நீ
என் வழிப்பும் நீ
என் நிஜமும் நீ
என் நிழலும் நீ

என் யுத்தங்களும் நீ
என் படைகளும் நீ
என் சத்ருவும் நீ
என் தோல்வியும்  நீ

என் வெட்கமும் நீ
என் தாகமும் நீ
என் பிரியமும்  நீ
என் கோபமும்   நீ

என் நியாயமும்   நீ
என் அநியாயமும் நீ
என் கோரிக்கையும் நீ
என் நிராகரிப்பும் நீ

என் நினைவும் நீ
என் மறதியும் நீ
என் இஷ்டமும் நீ
என் கஷ்டமும் நீ

என் பந்தமும் நீ
என் சொந்தமும் நீ
என் ஆதியும் நீ
என் அந்தமும் நீ

என் மரணமும் நீ
என் ஜனனமும் நீ

Monday, January 4, 2010

இடுகைக்கு இடைவெளியும், புத்தாண்டு-பொங்கல் வாழ்த்தும்....



என் இனிய வலையுலக நண்பர்களுக்கு...

என் அலுவலக கணினியில் இருந்து வலைப்பூக்களை பார்வையிடவும்,இடுகை பதியவும் இயலாத நிலையில் (No Access to the external sites) உங்களிடம் இருந்த தற்காலிகமாக விடைபெறுவதில் எனக்கு மிகுந்த வருத்தம்.

விரைவில் சொந்த கணினி வாங்க உத்தேசம் உள்ளதால் சிறு இடைவெளிக்கு பின்னர் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

இதுவரை என் இடுகைகளுக்கு கருத்தூட்டம் அளித்து ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வலையுலக நண்பர்களுக்கும்,அவர்கள் குடும்பத்திற்கும் என் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

நன்றியுடன், உங்கள் தோழி ஆழிமழை :)