Tuesday, December 8, 2009

புல்


என்னவனே !!

நேற்று நீ நின்றிந்த கால்தடத்தில் இடது புல் ஒன்றை எடுத்து
என் வீட்டில் பதியமிட்டேன்;

இன்று அதன் வேரருகே ஒரு குட்டி புல்

கண் சிமிட்டும் நேரத்தில் என் வீடு முழுவதும் புற்கள்

பச்சை பசேலென என் மனத்தோட்டம் முழுக்க

உன் நினைவு பூக்கள் மலர்கிறது;
என் சுவாசத்தில் பூ வாசம் நிறைகிறது .........................

7 comments:

  1. தோழி, எனக்கு இந்த வரிகள் “இன்று அதன் வேரருகே ஒரு குட்டி புல், கண் சிமிட்டும் நேரத்தில் என் வீடு முழுவதும் புற்கள்” நேற்று படித்த ஒரு ருஷ்ய சிறுகதையை நினைவூட்டுகிறது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றிகள் முரளி

    ReplyDelete
  3. ரொம்ப அருமையா எழுதுற கல்யாணி.இன்னும் நிறைய கவிதைகள் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ரொம்ப நல்லாயிருக்கு தோழி..

    ReplyDelete
  5. நல்ல மன உணவை சொல்லியிருக்கிறீர்கள்!!

    ReplyDelete
  6. ரொம்ப நல்லா இருக்குங்க. (நம்ம கவிதைகளின் தலைப்பு மட்டுமில்ல நம்ம பேரு கூட ஒரே மாதிரி இருக்குங்க.)

    ReplyDelete
  7. காதலின் மெலிதான உணர்வுகள்...... அருமை!

    ReplyDelete