Tuesday, December 8, 2009

தோழமையே !!!!!!!!!!!!!!!!!!!!

இது என் தோழனின் படைப்பு !!! உங்களோடு பகிர்கிறேன்

காலம் மறக்கச்செய்ய மறந்துவிட்ட
பல நினைவுகளின் எச்சங்கள்
மனதின் மூலையில் மலைக்குன்றாய்

பாதையில் வரும்
பனிக்காற்றும் பூஞ்சோலைகளும்
முட்செடிகளும் புதர்காடுகளும்
தோண்டிப் பார்க்கவே செய்கின்றன
புதைந்திருக்கும் நினைவுகளை

எனக்கான ஒவ்வொரு
விடியல்களிலும் பொழுதுகளிலும்
காலதேவன் முன் மண்டியிட்டு மன்றாடுகிறேன்
அத்தனை நினைவுகளையும் அள்ளிச்செல் என

ஆனாலும் நினைவெச்சங்கள் எச்சங்களாகவே
நிகழ்வின் கணங்களை அச்சுறுத்திக் கொண்டே….

சாம்பு........

5 comments:

  1. ஆனாலும் காதல் ரொம்ப கொடியது தான்.
    காதல்(லி) நீங்கி போகையில் உடன் நினைவுகளும் சேர்ந்து போகும் வரம் வேண்டும்.
    கவிதை அருமை.

    ReplyDelete
  2. நன்றி கதிர்
    நன்றிகள் பிரபு

    ReplyDelete
  3. எல்லாம் காதல் படுத்தும் பாடு... நல்லாயிருங்க!!

    ReplyDelete