Wednesday, November 11, 2009

நானும் நீயும்


சேர்ந்து சிரித்தோம் நட்பில்
ஏனோ பிரிந்து அழுகிறோம் காதலில்

சேர்ந்தே இருபினும் நம் உயிர் தனியே நின்றது அன்று
பிரிந்து நின்றாலும் நம் உயிர் உறவாடுகிறது இன்று
குடைக்குள் விழும் சாரலை போல
உன் நினைவுகள் என் நெஞ்சோடு உறவாடுகிறது

நீ இல்லை என்ற ஒற்றை சொல்லில் சரிந்த என் இதயம்
உன் ஞாபகம் என்ற ஒற்றை சொல்லில் உயிர் தங்குகிறது

நிலதோடு உறவாடும் ஒவ்வொரு மழையிலும்
எங்கோ பிரிந்த காதலின் கண்ணீர் கலந்தே இருக்கிறது

என் கண்கள் எழுதும் காதல் கவிதைகள்
என் கண்ணீரிலே கரைத்து மழையோடு சொல்லாமல் கலக்கிறது

பூமியில் பூக்கும் எல்லா காதலிலும் ஒரு பைத்தியகாரத்தனம் உள்ளது
என் காதலும் விதிவிலக்கல்ல

நீ இருந்தால்தான் தான் நான் காதலிக்க வேண்டும் என்றில்லை நீயே என் சுவசமானபின்.........

3 comments:

  1. //நீ இல்லை என்ற ஒற்றை சொல்லில் சரிந்த என் இதயம்
    உன் ஞாபகம் என்ற ஒற்றை சொல்லில் உயிர் தங்குகிறது

    நிலதோடு உறவாடும் ஒவ்வொரு மழையிலும்
    எங்கோ பிரிந்த காதலின் கண்ணீர் கலந்தே இருக்கிறது//

    ஒரு பெண்ணோட காதலின் வலிகளை இந்த வரிகள் எவ்ளோ அழகா சொல்லிவிடுகிறது.மிக அருமையாக இருக்கிறது தோழி உன்னோட இந்த கவிதை.

    ReplyDelete
  2. தோழியே நீயுமா சிக்கிக்கொண்டாய்.
    உன்கவிதையில் என் எண்ணங்களும் கலந்திருக்கிறது.. அருமை தொடர்ந்து எழுதுங்கள்...

    நேரம் கிடைக்கும்போது என்வீட்டுப்பக்கமும் வாருங்கள்,, அட்ரஸ் இதோ..

    http://niroodai.blogspot.com

    htt://kalasairal.blogspot.com

    ReplyDelete
  3. //குடைக்குள் விழும் சாரலை போல
    உன் நினைவுகள் என் நெஞ்சோடு உறவாடுகிறது//

    சாரலை போல இனிய வரிகள்.

    ReplyDelete