Wednesday, December 7, 2011

சாரல்கள்

என்னுள் மழை பெய்தது
நினைவு கொடை கொண்டு சிலவற்றை தடுத்தேன்
அனால் என் மேல் சாரல்கள் விழுவதை தடுக்க முடியவில்லை
என் விருப்பம் என்பதும் விதிவசம்
என் நம்பிக்கை என்பதும்  விதிவசம்
இதிலே எதிர்பார்ப்பு என்பதற்கு வழியே இல்லை
இங்கே உதடுகளை சாயம் தான் அலங்கரிக்கிறது  - உண்மை அல்ல
நெஞ்சங்களை பொய் தான் அலங்கரிக்கிறது - நேர்மை அல்ல
மழையின் சிறு சிறு துளிகளை போல் என்னுள் தான் எத்தனை நினைவுகள்
ஒருவேளை நான் நிலைத்திருப்பது இதன் வாயிலாகதானோ !!!!!