Monday, October 12, 2009

விடுகதை

வாழ்க்கை விடுகதைகளின் குழுமம் !!!

சிலசமயம் விடையை கையில் வைத்துக்கொண்டு வினாக்களை தேடி ஓடுகிறோம், சற்றே வளைத்தாலும் ஒடிந்து விடும் ஒரு நேர் கோட்டை போல்

பலசமயம் வினாக்களை கையில் வைத்துக்கொண்டு விடைகளை தேடி ஓடுகிறோம் சுற்ற சுற்ற வெளி வர முடியாத வளையத்தை போல்

வினாக்களை தூர எரிந்து, விடைகளை களைந்து, வளைந்து கொடுத்து பின் நிமிர்ந்து நிற்கும் ஒரு நாணலை போலநாம் வாழ பழகினால் என்ன ????

இந்த வினாவிற்கு விடை தேடுகிறேன் .........

இருட்டு நதியில் நதியில் இதமாய் மிதக்கும் குருட்டு படகை போல ........

நான் காத்திருக்கிறேன்

நானும் காத்திருக்கிறேன்.........
ஆமாம் காத்திருக்கிறேன்.........
மண்ணை தொடும் முதல் மழை துளிக்காக..........
மாலை வேளையில் விண்ணில் தோன்றும் நிலவுக்காக
என் கால்களை முத்தமிட ஓடி வரும் கடலைக்காக
கண்களை மூடியவுடன் நிழலாடும் உன் புன்னகைக்காக
என் கண்ணில் துளிரும் முதல் கண்ணீர் துளிக்காக
அந்த முதல் துளியை துடைக்க விரையும் உன் கை விரலுக்காக
உன்னிடமிருந்து அன்பை சுமந்தது வரும் ஒரு குறுஞ்செய்திக்காக
என் காத்திருப்பின் சுகம் தெரியும் எனக்கு !!!!!
என் காத்திருப்பின் சுமை தெரியுமா உனக்கு ?????????